Published : 11 Jan 2017 09:00 AM
Last Updated : 11 Jan 2017 09:00 AM

பயிர்க்கடன்கள் தள்ளுபடி: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. நிலவரி என்பது மிகக் குறைந்த தொகை. பயிர்க்கடன் தள்ளுபடிதான் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை. கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து வகை பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நிபந்தனையின்றி, பாதிக்கப் பட்ட பயிர்களில் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், நீண்டகால பணப் பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி வேலை வழங்கும் நாட்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற் கத்தக்கது. அனைத்து குடும்பங் களுக்கும் முழு அளவில் வேலை வாய்ப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த 190 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x