Published : 05 Apr 2014 02:00 PM
Last Updated : 05 Apr 2014 02:00 PM

தென்சென்னை வேட்பாளரை கடைசி நேரத்தில் அறிவித்தது காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி, தென்சென்னை வேட்பாளரை கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது. தென் சென்னையில், ரமணி போட்டியிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவித்துள்ளார். இத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதே போல், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணி வரை வரை மட்டுமே வேட்பு மனுக்கள் பெறப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x