Published : 23 Mar 2017 11:51 AM
Last Updated : 23 Mar 2017 11:51 AM

வறட்சியால் நாடு திரும்பும் வலசைப் பறவைகள்: வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம் - சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம்

வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் குறைவால் வெளிநாட்டுப் பறவை கள் நாடு திரும்ப தொடங்கியதால் பறவைகள் இன்றி சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல் கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந் தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந் துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நவம்பர் மாதம் சீசன் தொடங்கும். இதமான சூழல் காரணமாக கனடா, நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியுசிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிடுநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பறவைகள், இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. மேலும், ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சு களுடன் மீண்டும் தாய்நாடு திரும்பு வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வேடந்தாங்கல் கிராமப் பகுதியில் மழை பெய்ததால் சீசன் தொடங்கியது. இதனால் ஏராள மான பறவைகள் வரத் தொடங் கின. இதையடுத்து அக்டோபர் மாதம் சரணாலயம் பார்வையாளர் களுக்காக திறக்கப்பட்டது. பறவை களும் ஏரியில் உள்ள மரக்கிளை களில் வழக்கம்போல் கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் வார்தா புயலின் போது வீசிய பலத்த காற்றால், ஏரியில் மரக்கிளைகளில் இருந்த முட்டைகள் மற்றும் குஞ்சுகள் சேதமடைந்தன. எனினும், பெரியளவில் பறவைகள் பாதிக் கப்படவில்லை என சரணாலய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது, மழை இல்லாத தாலும் கடும் வெயில் காரணமாக ஏரியில் நீர் இருப்பு குறைந்து வரு கிறது. இதனால் போதிய இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் தட்பவெட்ப சூழ்நிலை மாறு பாடு காரணமாகவும் பறவைகள் தாய்நாடு திரும்பிச் செல்லத் தொடங்கின. இதனால், சரணாலயம் பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும், பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல் கின்றனர். அதனால், சரணால யத்தை மூட வேண்டும் என உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி யுள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுலா வந்த சிலர் கூறும்போது, ‘பறவை களைக் காண்பதற்காக குடும்பத் துடன் வந்தோம். ஆனால், ஏரியில் தண்ணீர் குறைவினால் மரக்கிளைகளில் ஒன்றிரண்டு பறவைகளை மட்டுமே காணமுடி கிறது. இதனால், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல் கிறோம். பறவைகளே இல்லாத நிலையால் சரணாலயத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, சரணாலய வனச் சரகர் சுப்பையா கூறிய தாவது: சரணாலயத்துக்கு இந்த ஆண்டு சீசனில் 22 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. பார்வை யாளர்களாக பெரியவர்கள் 58,23 மற்றும் சிறியவர்கள் 21,177 பேர் வந்துள்ளனர். மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால், தண்ணீர் நிரம்பியிருக்கும் பிற நீர் நிலைகளை நோக்கி பறவைகள் இடம்பெயர்கின்றன’ என்று கூறினார்.

சரணாலயத்தை மூடுவது பற்றி வன உயிரின காப்பாளர் கீதாஞ் சலியிடம் கேட்டபோது, “சரணா லயத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை மற்றும் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு உள் ளிட்டவை பற்றி ஆய்வு செய்த பிறகு உரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x