மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க த்ரிஷா கோரிக்கை

மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க த்ரிஷா கோரிக்கை
Updated on
1 min read

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் 4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய விடியோ பதிவு இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த வழக்கில் நாயைத் தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் இருவரும் போலீஸில் சரணடைந்து, ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “இரண்டு மருத்துவக் கல்லூரி மாண வர்களை கல்லூரியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in