Published : 15 Feb 2017 08:14 AM
Last Updated : 15 Feb 2017 08:14 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவ ரசி, சுதாகரன் ஆகியோர் வரு வாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் 2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். எனவே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, 2003-ல் இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.
இந்த வழக்கில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண் டார். இந்த வழக்கு வேகமாக நடைபெறுவதற்கு அன்பழகனும், அவரது வழக்கறிஞர்களும் நீதி மன்றத்தில் நடத்திய சட்டப்போராட் டம் முக்கிய காரணமாக அமைந் தது.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய் துள்ளது. இதை க.அன்பழகன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீண்ட சட்டப் போராட்டத் துக்குப் பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
இது ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT