நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது: விசைப் படகும் பறிமுதல்

நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது: விசைப் படகும் பறிமுதல்
Updated on
1 min read

நாகப்பட்டினம் அக்கரைப்பேட் டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்கள் சென்ற விசைப் படகையும் கொண்டு சென்றனர்.

அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம்(32), செல்லையன் மகன் சங்கர்(48), வெங்கடாசலம் மகன் செந்தில்(28), ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(20), ரங்கசாமி மகன் சக்திவேல்(38), சிவபெருமாள் மகன் முகேஷ்(30), அலங்காரசாமி மகன் வினோத்(37), குப்புசாமி மகன் ரமேஷ்(28) ஆகிய 8 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 20-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே 30 கடல் மைல் தொலை வில் நேற்று முன்தினம் மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப் பாக்கியைக் காட்டி மிரட்டி கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் விசைப் படகையும் கைப்பற்றி கொண்டு சென்றனர்.

காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட நாகை மீனவர்கள், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கூறியபோது, “61 நாள் தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இதற்காகவே காத்திருந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். மீனவர் களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்திய அரசு, உடனடியாக இலங்கை அரசிடம் கலந்துபேசி மீனவர்களை விடுவிக்கவும், கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு ஒரு முடிவு காண வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in