Published : 28 Oct 2015 08:08 AM
Last Updated : 28 Oct 2015 08:08 AM
கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் சுகாதார செவிலியர் கூட்ட மைப்பு சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சென்னை டி.எம்.எஸ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
உண்ணாவிரதத்துக்கு தலைமை யேற்ற சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பா.நிர்மலா கூறியதாவது:
பல ஆண்டுகளாக இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கும் 2500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுவரை பணியில் இருந்து ஓய்வுபெற்ற சுகாதார செவிலியர்களை தடுப்பூசித் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர் மற்றும் வெளியாட்கள் மூலம் பணி நியமனம் செய்யும் முறையினை ரத்து செய்ய வேண்டும்.
மேலும்,சுகாதாரத்துறை செவிலியர்களின் பணியிடங்களை மருத்துவத்துறை செவிலி யருக்கு தாரை வார்ப்பதையும் கண்டிக்கின்றோம். துணை சுகாதார நிலையங்களுக்கு போதுமான மருந்துகள், பதிவேடுகள் வழங்க வேண்டும். மூடப்பட்ட துணை செவிலியரின் பயிற்சி மையங்களை மீண்டும் தொடங்கிட வேண்டும். பெண் ஊழியர்கள், சங்க நிர்வாகிகளுக்கு எதிரான பழி வாங்கும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்போராட்டத்தில், கூட்டமைப் பின் மாநிலப் பொதுச் செயலாளர் வி.பரமேஸ்வரி, மாநிலப் பொரு ளாளர் ஜே.ஜேனட்பாய் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT