Published : 08 Oct 2014 11:25 AM
Last Updated : 08 Oct 2014 11:25 AM

காப்பக குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம்: ‘படிக்கட்டுகள்’ அமைப்பு இளைஞர்கள் ஏற்பாடு

’படிக்கட்டுகள்’ தன்னார்வ அமைப்பின் இளைஞர்கள் இந்த ஆண்டு தீபாவளியை சமயநல்லூர் சக்தி டிரஸ்ட் காப்பகத்தின் குழந்தைகளோடு கொண்டாடுகிறார்கள்.

2012-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக் கிய அமைப்பு ‘படிக்கட்டுகள்’ இயலாதவர்களுக்கு வலியப் போய் உதவுவதுதான் ‘படிக் கட்டு’களின் நோக்கம். குறிப்பாக அநாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங் களில் உள்ளவர்களோடு உடனிருந்து பண்டிகை நாட்களை கொண்டாடுவதும் இந்த இளைஞர் களின் போற்றுதலுக்குரிய செயல் பாடுகளில் ஒன்று.

இதன்படி, இந்த ஆண்டு மதுரை அருகிலுள்ள சமயநல்லூர் சக்தி டிரஸ்ட் காப்பக பெண் குழந்தைகள் 29 பேருடன் ‘படிக்கட்டுகள்’ இளைஞர்கள் தீபாவளியை கொண்டாடு கிறார்கள். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ’படிக்கட்டுகள்’ அமைப்பின் உறுப்பினர் கிஷோர் குமார் கூறியதாவது: ‘‘சக்தி டிரஸ்ட் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் இதுவரை தீபாவளிகொண்டாடியதே இல்லை. வழக்க மாக இதுபோன்ற காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்க நினைப்பவர்கள், ஏதோ ஒரு கலரில் ஏதோ ஒரு துணியை எடுத்துக் கொடுப்பார்கள். ஆனால், நாங்கள் அப்படி இருக்கக் கூடாது என நினைத்தோம். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான ஆடையை தாங்களே தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.

இதற்காக அந்தக் குழந்தைகள் 29 பேரையும் மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டிச் சென்றோம். அங்கு அவர்களுக்குத் தேவையான ஆடைகளை அவர்களே தேர்வு செய்தனர்.

இந்தப் பணியில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 40 தன்னார்வ இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அந்தக் குழந்தைகள் தேர்வு செய்த ஆடைகளுக்கான பில் தொகை ரூ.29,500-யை தன்னார்வ தொண்டர்கள் செலுத்தினர். ஆடைகளை வாங்கிய பிறகு அந்தக் குழந்தைகளை அப்படியே திருமலை நாயக்கர் மஹாலுக்கு அழைத்துச் சென்று மஹாலை சுற்றிக் காட்டினோம்.

முடிவில், ‘உங்களுக்கு வேறு ஏதாவது ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டபோது, ‘இந்த ஆண்டு தீபாவளியை நீங்கள் எங்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்’ என்று அந்தக் குழந்தைகள் தங்களது விருப்பத்தைச் சொன்னார்கள்.

அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டு தீபாவளியை ‘படிக்கட்டுகள்’ இளைஞர்கள் சக்தி காப்பகத்தில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, உணவு உண்டு நாள் முழுக்க கொண்டாடி மகிழ தீர்மானித்திருக்கிறோம்.’’

இவ்வாறு கிஷோர்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x