Published : 16 Oct 2014 09:53 AM
Last Updated : 16 Oct 2014 09:53 AM
'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில் தமிழ் நாடக விழா நாளை (அக்.17) தொடங்கி மூன்று நாட்களுக்கு நடக்கின்றன.
சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள நாரத கான சபாவில் தொடங்கும் நாடக விழாவின் முதல் நாள் மாலை 7 மணிக்கு `வாதவூரன்’ நாடகமும் 18-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சோ.ராம சாமியின் `என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’, 7 மணிக்கு ஒய்.ஜி.மகேந்திரனின் `பரீட்சைக்கு நேரமாச்சு’ ஆகிய நாடகங்களும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எழுத்தாளர் சுஜாதாவின் `கடவுள் வந்திருந்தார்’, மாலை 4 மணிக்கு கிரேஸி மோகனின் `சாக்லேட் கிருஷ்ணா’, 7 மணிக்கு இயக்குநர் விசுவின் `கொஞ்சம் யோசிங்க பாஸ்…’ ஆகிய நாடகங்கள் நடைபெற இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT