Published : 07 Aug 2016 08:10 AM
Last Updated : 07 Aug 2016 08:10 AM
19 வது கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது, ‘லென்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
‘கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் மெமோரியல் பவுண்டேஷன்’ ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய திரையுலகில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அறிமுக இயக்குநரை தேர்வு செய்து கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் பெயரில் விருது வழங்குகிறது. அந்த வரிசையில் 2015-ம் ஆண்டுக்கான விருதை ‘லென்ஸ்’ படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் பெறுகிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி, 12-ம் தேதி சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சாருஹாசனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் சுஹாசினி எழுதிய மேடை நாடகம் இடம்பெற உள்ளது. திரைப்பட இயக்குநர் ப்ரியா இயக் கும் இந்த ஆங்கில நாடகத்தில் சாருஹாசனாக ஒய்.ஜி.மகேந் திரனும், அவரது மகள் சுஹாசினியாக ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியும் நடிக்கிறார்கள்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி, மதுவந்தி, ‘லென்ஸ்’ படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் மற்றும் கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT