Published : 20 Jul 2016 08:44 AM
Last Updated : 20 Jul 2016 08:44 AM

மாநில சுயாட்சி கொள்கை குறித்து பிரதமர் மோடி பேச்சுக்கு கருணாநிதி வரவேற்பு

மாநில சுயாட்சி கொள்கை குறித்து பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்து இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில சுயாட்சி குறித்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் இந்தக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு மாநிலங்களின் பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும்.

ஆனால், 2006 க்கு பிறகு தற்போதுதான் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான இந்தக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா செல்லாமல், நிதி யமைச்சரை அனுப்பி தனது உரையை படிக்கச் செய்திருக்கிறார். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும், தமிழக முதல்வர் பங்கேற்று இருந்தால் இன் னும் சிறப்பாக இருந்திருக்கும் என தனது கருத்தைக் கூறியிருக் கிறார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை குறித்தும், குறிப்பாக மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்றும், மாநில அரசுகளின் கருத்துகளை சுதந் திரமாகவும்,வெளிப்படையான முறையிலும் தெரிவிக்கும் வாய்ப்பு இந்தக் கவுன்சிலில் அளிக்கப்படுகிறது என பேசி யிருப்பது திமுக நீண்ட பல ஆண்டுகளாக சொல்லி வரும் மாநில சுயாட்சி கொள்கைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஊக்கமளிக்கும் செயல்.

ஆனால் இந்திய அரசியலமைப் புச் சட்டத்தின் 356-வது பிரிவை நீக்க வேண்டும் என்ற கருத்துகள் குறித்து இதுவரை மத்திய அரசு அளவில் எந்த வகையான தீர்வும் காணப்படாமல் உள்ளது என்பது என் மனதில் பெரும் குறையாக இருந்து வந்தது.

அதனைப் போக்கும் வகையில், 1970-ல் திமுக எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைகள் தற்போது டெல்லியில் நடை பெற்ற கூட்டத்தில் பிரதமரால் பேசப்பட்டு, அதிமுக உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் அதே கருத்துகளை எடுத்து வைக்கும் அளவுக்கு மாறி விட்டதைப் பார்க்கும் போது மாநில சுயாட்சிக் கொள் கைக்காக குரல் கொடுத்து வரும் திமுகவுக்கு பெரு மையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x