Published : 28 Oct 2015 08:11 AM
Last Updated : 28 Oct 2015 08:11 AM

டிஜிட்டல் மீட்டர் மின்வாரியத்திடம் தேமுதிக புகார்

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மின் இணைப்புகளுக்கு புதிதாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் எலக்ட் ரானிக் மீட்டர் அதிகளவு சூடாகிறது என்று மின்சார வாரியத்திடம் தேமுதிக மேற்கு சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.எம்.காமராஜ் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ள தாவது:

விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் மின் இணைப்புக்காக வழங்கப்பட்ட புதிய டிஜிட்டல் எலக்ட்ரானிக் மீட்டர்கள் அதிகளவில் சூடாகின் றன. மேலும், சாலை ஓரமாக இருக்கிற மின் இணைப்பு பெட்டி கள் பல பராமரிப்பின்றி உள்ளன. இது தொடர்பாக தேமுதிக நடத்திய போராட்டத்தின் அடிப் படையில், புதிய இணைப்பு பெட்டிகள் ஆங்காங்கே கொண்டு வரப்பட்டன. ஆனால், அவற்றை இன்னும் பொருத்தவில்லை. எனவே, அவற்றை முறையாக பொருத்தி, பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x