Published : 04 Oct 2014 01:50 PM
Last Updated : 04 Oct 2014 01:50 PM
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்:
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 20-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 20-ம் தேதியும், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21-ம் தேதியும் பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT