தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம்
Updated on
1 min read

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்:

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 20-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 20-ம் தேதியும், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 21-ம் தேதியும் பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in