Published : 04 Feb 2017 08:32 AM
Last Updated : 04 Feb 2017 08:32 AM
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக் கத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவ மனை, இந்திய இதய செயலிழப்பு சங்கம் இணைந்து இதய செயலிழப்பு-360 டிகிரி என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டு மாநாடு சென்னை கிண்டியில் இன்று தொடங்கு கிறது. இந்த மாநாடு குறித்து அப்போலோ மருத்துவமனை இதய நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.சுந்தர் பேசியதாவது:
உலக அளவில் இதய செய லிழப்பால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இந்தியாவில் 50 லட்சம் பேர் இதய செய லிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதயம் செயலிழந்த பிறகு, மற்ற உறுப்புகளும் செயலிழக்க வாய்ப்புள்ளது. இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செய லிழந்தால், பல்துறை டாக்டர் கள் இணைந்து சிகிச்சை அளிக்கின்றனர். இதயம் மட்டும் செயலிழந்தால், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். இதயத்துடன் மற்ற உறுப்பு களும் செயலிழந்தால், அனைத்து உறுப்புகளுக்கும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். அதற்கான நவீன சிகிச்சையும், தொழில்நுட் பமும் உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் பல் துறை டாக்டர்கள், செவிலியர் கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உட்பட மருத்துவத்துறை சார்ந்த அனைவரும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. அவ ருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கள் குறித்த அனைத்து விவரங் களையும், எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. அது வதந்தி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT