Published : 27 Apr 2017 02:56 PM
Last Updated : 27 Apr 2017 02:56 PM
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தாயும் தந்தையுமற்ற கட்சியாக மாறியுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தாயும் தகப்பனும் இல்லாத இயக்கமாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா பாடுபட்டு உருவாக்கிய அதிமுக இன்றைக்கு ஒரே கட்சியாக இயங்க வேண்டும் என மக்களும், தொண்டர்களும் நினைக்கிறார்கள்.
இரு அணிகளும் நிச்சயம் இணையும். அதிமுகதான் அடுத்த 4 ஆண்டுகளும் ஆட்சி செய்யும்'' என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT