Published : 04 Aug 2016 08:07 AM
Last Updated : 04 Aug 2016 08:07 AM

பொது கலந்தாய்வில் 257 ஏஇஓ இடமாறுதல்

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏஇஓ) 257 பேருக்கு கலந்தாய்வில் இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இத்தகவலை தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்ககத் தின் கீழ் பணியாற்றும் உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழியாக நேற்று நடைபெற்றது.

408 பேர்

இந்த கலந்தாய்வில் 408 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 257 பேர் தாங்கள் விரும்பிய இடத்தை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x