Published : 02 Mar 2014 07:00 PM
Last Updated : 02 Mar 2014 07:00 PM
காய்கறி வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
இதுகுறித்து, கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் வி. ஆர். சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம், பீன்ஸ், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், பீன்ஸ், சாம்பார் வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகள் நாள் தோறும் வருகின்றன. சராசரியாக 220 முதல் 240 லோடுகள் வரை வருவது வழக்கம்.
தற்போது காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்ததால், கடந்த நவம்பரில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது 300 முதல், 350 லாரிகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
இதனால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சில்லறை விலையில், கிலோ ரூ.100- க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.15-க்கும், ரூ. 25- க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.12- க்கும், ரூ.40-க்கு விற்ற தக்காளி ரூ.7- க்கும் கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.
அதே போல் ஒரு மாதத்துக்கு முன் ரூ.15 க்கு விற்ற ஒரு முருங்கைகாய், தற்போது ரூ.2 க்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் கிலோ 10 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், புடலங்காய், கேரட்ஆகியவை கிலோ 20 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
இவ்வாறு வி. ஆர். சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT