Published : 04 Oct 2013 05:34 PM
Last Updated : 04 Oct 2013 05:34 PM

டிச.4-ல் ஏற்காடு இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏற்காடு சட்டப் பேரவை தொகுதிக்கு, டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை, தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று வெளியிட்டார்.

அதன்படி, ஏற்காடு இடைத் தேர்தல் டிசம்பர் 4-ல் நடைபெறும். நவம்பர் 9-ம் தேதி முதல் நவம்பர் 16-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். நவம்பர் 20-ம் தேதி வேட்பு மனுத்தாக்கலை திரும்பப் பெற கடைசி நாள்.

இந்த இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு, டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x