Published : 19 Apr 2017 12:38 PM
Last Updated : 19 Apr 2017 12:38 PM

அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் தலையிடுவது திமுகவின் மரபு அல்ல: ஸ்டாலின்

அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் திமுக தலையிடாது. அப்படி தலையிடுவது திமுகவின் மரபு அல்ல என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க புதன்கிழமை வந்தார். அங்கு முதல்வர் இல்லாததால் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சபாநாயகரிடம் அளித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''மனு தர அரைமணி நேரம் காத்திருந்தும் முதல்வரை சந்திக்க முடியவில்லை. முதல்வர் எங்களிடம் பேசியிருக்க வேண்டும். பேரவையைக் கூட்டுவது பற்றி முதல்வரிடம் பேசுவதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கோமா நிலையில் உள்ளது. சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்.

அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் திமுக தலையிடாது. அப்படி தலையிடுவது திமுகவின் மரபு அல்ல'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x