Published : 11 Feb 2017 08:41 AM
Last Updated : 11 Feb 2017 08:41 AM

அனைத்து எம்எல்ஏ-க்களும் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை கேட்க வேண்டும்: ஆறுக்குட்டி வலியுறுத்தல்

அனைத்து எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி தெரி வித்தார்.

கவுண்டாம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக் குட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவாக உள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். இவருடன் இணைந்த பிறகு, எனது தொகுதி மக்களிடம் இருந்து தொடர்ந்து எனக்கு ஆதரவு வந்துக் கொண்டிருக்கிறது. எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. எனவே அனைத்து எம்எல்ஏ-க்களும் உடனடியாக தனது தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். மக்கள் யாரை ஆதரிக்க சொல்கிறார்களோ, அவரை ஆதரிக்க வேண்டும். அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களில் பலர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x