Published : 20 Sep 2016 07:23 PM
Last Updated : 20 Sep 2016 07:23 PM
குறைந்தபட்சம் 12,000 கன அடி நீரையாவது இம்மாத இறுதிவரை திறந்து விட உச்ச நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நீர் தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இதனை தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இதே உத்தரவில் தினமும் 6000 கன அடி நீரை செப்டம்பர் 27 வரை திறந்துவிட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.
கடந்த செப். 12 தேதிய உத்தரவுப்படி குறைந்தபட்சம் 12,000 கன அடி நீரையாவது இம்மாத இறுதிவரை திறந்து விட உச்ச நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT