Published : 28 Mar 2017 09:17 AM
Last Updated : 28 Mar 2017 09:17 AM

பிஎஸ்.4 தொழில்நுட்பம் 1-ம் தேதி முதல் கட்டாயம்: இருசக்கர வாகனங்களின் விலை 20% உயரும் அபாயம்

புதிய இருசக்கர வாகனங்களில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் மாசு அளவை குறைக்கும் பிஎஸ்.4 தொழில்நுட்பம் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், புதிய இருசக்கர வாகனங்களின் விலை 20 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் மாசு அளவுகளை பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) என்று அளவீடு செய்யப் படுகிறது. அதாவது, பி.எஸ் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாகனங்கள் வெளி யிடும் நச்சுப் புகையின் அளவு குறைந்து வருவதாக பொருள். அதிகரித்து வரும் வாகனங்களின் புகையால் நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலங் களில், வாகனங்களில் ‘பி.எஸ்., 4' வகை இன்ஜின்கள் கொண்டதாக அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, தற்போது நம் நாட்டில் இயக்கப்படும் வாகனங் கள் அனைத்தும், ‘பி.எஸ்., 3' வகையிலான இன்ஜின்கள் ‘பி.எஸ்., 4' இன்ஜின்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, கார்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் பிஎஸ்.4 தொழில்நுட்பத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், இருசக்கர வாகன நிறுவனங்கள் பிஎஸ்.3 தொழில்நுட்பத்தில்தான் ஓடுகிறது. இதற்கிடையே, அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ம் தேதி முதல் புதியதாக வாங்கும் இருசக்கர வாகனங்கள் கட்டாயம் பிஎஸ்.4 தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களின் விலை 20 சதவீதம் வரையில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தற்போது நம் நாட்டில் ஓடும் கார் மற்றும் மாநகரப் பேருந்துகளில் கார்பன் அளவை குறைவாக வெளியிடும் இன்ஜின் கள் பொருத்தி இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 1-ம் தேதி முதல் பிஎஸ்.4 தொழில்நுட்பம் புதியதாக இருசக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

இதனால், வாகனங்கள் வெளி யிடும் புகையில் நச்சு அளவு குறைந்து, சுற்றுச்சூழலைப் பாது காக்க முடியும். மத்திய அரசு ஏற்கெனவே இந்த உத்தரவை இருசக்கர வாகன நிறுவனங் களுக்கு உத்தரவிட்டுள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் பி.எஸ்.4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.4,000 வரை உயரும்

இது தொடர்பாக இருசக்கர வாகன நிறுவனங்களின் டீலர்கள் சிலரிடம் கேட்ட போது, ‘‘இருசக்கர வாகனங்கள் இனி பிஎஸ்.4 தரம் கொண்ட இன்ஜின்கள் பொருத்தி இயக்க வேண்டுமென மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

இதனால், எங்களுக்கான உற்பத்தி செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களுக்கு உள்ள சந்தை வாய்ப்பு மற்றும் பிராண்ட்களின் தன்மையைப் பொருத்து ரூ.1,000 முதல் ரூ.4,000 வரையில் விலை உயர வாய்ப் புள்ளது. ஆனாலும், சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் களைத் தக்கவைத்துக் கொள்ள பெரிய அளவில் விலை உயர்வு செய்ய மாட்டார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x