Published : 15 Feb 2014 01:36 PM
Last Updated : 15 Feb 2014 01:36 PM

இலங்கை சிறையில் வாடும் 121 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் வாடும் 121 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: கடந்த 13-ம் தேதி அன்று அதிகாலை 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாக்ஜலசந்தியில் நிம்மதியாக மீன்பிடிப்பதை இப்போது இலங்கை கடற்படை யினர் திறமையாக தடுத்து வருகிறார்கள் .

அச்சத்தில் தமிழக மீனவர்கள்

மீனவர்களின் மீன்பிடி பயணம் ஆபத்து நிறைந்த சுமையாகவும், இலங்கை கடற்படையினரின் தாக்குதல், துன்புறுத்தல், சிறைபிடிப்பு, நீதிமன்ற காவல் எப்போது நிகழுமோ என்ற கவலை நிறைந்ததாகவும் உள்ளது.

இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது ஒரு சுமூக நிலை உருவான பின்னர் இலங்கை கடற்படை இத்தகைய விரோத செயல்களை தீவிரப்படுத் தியுள்ளது. தற்போது நிகழ்ந்துள்ள சம்பவத்தில், கடந்த 13-ம் தேதி அன்று பாக்ஜலசந்தி பகுதியில் 7 இயந்திர படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதா பட்டிணம் பகுதி மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிப்ரவரி 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசால் 1974, 1976-ம் ஆண்டுகளில் போடப்பட்ட முட்டாள்தனமான ஒப்பந்தங்கள் காரணமாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 5 தமிழக கடலோர மாவட்டங் களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதார உரிமை இலங்கை கடற்படையின் தயவுக்கு விடப்பட் டிருப்பது குறித்து எனது முந்தைய கடிதங்களில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

பாராமுகம்

இந்த ஒப்பந்தங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி இந்தியாவின் இறையாண்மை பகுதியான கச்சத் தீவையும் பறித்துச் சென்றுவிட்டது. லட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையை மத்திய அரசாங்கம் இன்னும் உணர்வில்லா பிரச்சினையாகத்தான் கருதி வருகிறது. தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்

பட்டிருப்பது, அடிக்கடி நடக்கும் தாக்குதல், சிறை பிடிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தூதரக அளவில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள் ளவில்லை.

இந்த பிரச்சினையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று கடந்த 13-ம் தேதி பிடித்துச்செல்லப்பட்ட 29 மீனவர்கள் உள்பட இலங்கை அரசின் பிடியில் இருக்கும் 121 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x