Published : 23 Aug 2015 10:13 AM
Last Updated : 23 Aug 2015 10:13 AM

அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல்

அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் கண்ணிய மான தேர்தலுக்கான கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ‘தமிழக தேர்தல் தொடர்பான பிரச்சினை களும் ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சியும்’ என்ற கருத்தரங்கை சென்னை அடையாறில் நேற்று நடத்தின.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

அரசியல் கட்சிகள் மக்களின் தேவைகளை அறிந்து வைத் துள்ளன. அதன் அடிப்படையில் தான் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முழுமையாக செயல்படுத்து வதில்லை. மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதில் பெரும் பாலான கட்சிகள் அலட்சியம் காட்டுகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையமே நேரடியாக நடவடிக்கை எடுக்கும் வண்ணம் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் நிதி பெறுவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசியல் கட்சிகள் எந்த வகையில் நிதி பெறுகின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இடைத்தேர்தல்களை பொறுத்தவரையில் நிறைய அதிகார குறுக்கீடுகள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். கட்சிகளின் உட்கட்சி தேர்தலிலும் ஜனநாயகம் இல்லை. தலைமை நினைப்பவர்களே பொறுப்புக்கு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்குக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தலைமை தாங்கினார். சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x