Published : 02 Feb 2017 09:30 AM
Last Updated : 02 Feb 2017 09:30 AM
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்ற 5-வது அமர்வில் நீதிபதிகள் முன்பாக நடந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆகவே அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவை’’ என மீண்டும் கால அவகாசம் கோரினார். அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘முதலில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும்’’ என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT