குமரி மீனவர்கள் மேலும் 20 பேர் ஈரானில் சிறைபிடிப்பு

குமரி மீனவர்கள் மேலும் 20 பேர் ஈரானில் சிறைபிடிப்பு
Updated on
1 min read

கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர் ஈரான் கடலோர காவல்படையின் பிடியில் சமீபத்தில் சிக்கி அந்நாட்டு சிறையில் வாடுகின்றனர்.

இதற்குள், சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித்த குமரி மீனவர்கள் 20 பேர், ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக் கப்பட்ட அதிர்ச்சி தகவல், தெற்காசிய மீனவ தோழமை அமைப்புக்கு நேற்று வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். கடந்த 20-ம் தேதி சவுதிஅரேபியாவில் கரீம், கத்தக் ஆகிய பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக 4 விசைப்படகு களில் சென்றனர். அன்று இரவு தங்கள் கடல் எல்லைக்குள் புகுந்ததாக ஈரான் கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் நடுக்கடலிலேயே 24 நாட்களாக விசைப்படகுகளில் சிறை வைத்துள்ளனர். அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளது இக்தீப் என்ற தீவு பகுதி என்பதால், அவர் களை சந்திக்க சவுதி அரேபியாவைச் சேர்ந்த படகு உரிமையாளர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.

தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் பாதர் சர்ச்சில் கூறும்போது, ’’ஈரானின் இக்தீப் தீவில் குமரி மீனவர்கள் 20 பேரும் 24 நாட்களாக உயிருக்கு போராடி வருகின்றனர். ஈரான் அரசு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க அக்கறை காட்டவில்லை. எனவே மீனவர் களை மீட்க நடவடிக்கை எடுக்கு மாறு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை மெயில் அனுப்பி யுள்ளோம்’’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in