Published : 21 Oct 2014 10:27 AM
Last Updated : 21 Oct 2014 10:27 AM
அதிக கட்டணம் வசூலித்த மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 21 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 13 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 இடங்களில் இதுவரை மொத்தம் 900 பஸ்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
வாகன தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்று பயணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 21 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பஸ்களின் பர்மிட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு நோடடீஸ் அனுப்பப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப் படுவதால், இன்று அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். எனவே, கூடுதல் இடங்களில் சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொள்வர். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT