இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 20 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 20 பேர் கைது
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்தனர்.

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, மன்னார் கச்ச்தீவு முகாமில் தங்கவைத்துள்ளனர். 4 படகுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்திய கடல் எல்லையில் இருந்தார்களா? அல்லது கடல் எல்லையைத் தாண்டினார்களா? என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 34 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இரவுதான் மண்டபம் திரும்பினர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in