Published : 26 Mar 2014 07:50 AM
Last Updated : 26 Mar 2014 07:50 AM

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்: பிளஸ் 2 தேர்வு முடிந்தது

பிளஸ் 2 தேர்வு செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த இந்த தேர்வு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. கடைசி நாளில், கணினி அறிவியல், உயிரி-வேதியியல், இந்திய கலாச்சாரம், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், சிறப்புத் தமிழ், தட்டச்சு தேர்வுகள் நடந்தன.

பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடைசி நாளில் தேர்வு எழுதிவிட்டு தேர்வறையில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இருப்பினும் சக நண்பர்களை விட்டு பிரிகிறோமோ என்ற ஏக்கமும் கவலையும் பல மாணவர்களின் முகத்தில் காணமுடிந்தது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச் சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். இந்த ஆண்டு தேர்வு வழக்கமான நேரத்தைவிட 45 நிமிடம் முன்கூட்டியே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

தேர்வு அட்டவணை விவரம் :

மார்ச் 26 - மொழித்தாள்-1

மார்ச் 27 - மொழித்தாள்-2

ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2 - ஆங்கிலம் 2-ம் தாள்

ஏப்ரல் 4 - கணிதம்

ஏப்ரல் 7 - அறிவியல்

ஏப்ரல் 9 - சமூக அறிவியல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x