Published : 05 Apr 2017 09:40 AM
Last Updated : 05 Apr 2017 09:40 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரனுக்கு ஆதர வாக ‘Vote for Bjp’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தண்டை யார்பேட்டையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் செயலியை நேற்று அறிமுகப்படுத்தி வைத்த பிறகு நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
ஆர்.கே.நகரில் போட்டியிடும் பல வேட்பாளர்கள், வரவேற்பைக்கூட பணம் கொடுத்துதான் வாங்கி வருகின்றனர். அங்கு பணப் பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் தேர்தலை நடத்தி பயன் இல்லை. தேர்தல் ஆணையம், சில அரசு அதிகாரிகளை மாற்றுவது மட்டும் பயன் தராது. இதுவரை ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், பல கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தங்க ளின் சின்னமான மின்கம்ப மாதிரிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வரையறுக்கப்பட்டதைவிட அவர்கள் அதிகம் செலவு செய்கின்றனர். எனவே, ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் நாளை (இன்று) புகார் அளிக்க உள்ளோம்.
கல்லாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும் இந்தியை திணிக்கக்கூடாது என்ற அக்கறை எங்களுக்கு உண்டு. இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
விவசாயிகளின் நலனுக்காகத்தான் பயிர் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேரை பதிவு செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் 13 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் இணையாமல் மத்திய அரசை குறை சொல்வதில் நியாயம் இல்லை.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT