சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஜெ. மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஜெ. மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பளித்தார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத் தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித் ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து 4 பேரும் கடந்த 17-ம் தேதி ஜாமீன் பெற்றனர்.

மேல் முறையீட்டு மனு

இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா உள் ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவை யில் உள்ளது. இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

அப்போது ஜெயலலிதா தரப்பில்,''சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டுக்கான‌ ஆவணங்களை தயாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் டிசம்பர் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இருக்கிறது. நாங்கள் மேல்முறை யீட்டு மனுவை மூல வழக்குடன் இணைத்துக்கொள்ள இருக்கி றோம். எனவே மேல்முறையீட்டு மனுவை உரிய ஆவணங்கள் தயாரிக்கும் வரை ஒத்தி வைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in