Published : 28 Jul 2016 08:29 AM
Last Updated : 28 Jul 2016 08:29 AM

126 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யும்வரை புறக்கணிப்பு போராட்டம் தொடரும்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழக வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறும்வரை நீதிமன்ற புறக்கணிப் புப் போராட்டம் தொடரும் என சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கம் அறிவித் துள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங் களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தமிழக வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் உச்சகட்டமாக கடந்த 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நீதிமன்றங் களில் சிசிடிவி கேமரா பொருத் துவது தொடர்பான வழக்கு விசா ரணையின்போது, ‘வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவதாக நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஏற்று வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தலைமை நீதிபதியின் உத்த ரவை ஏற்று பணிக்கு திரும்புவதா அல்லது போராட்டத்தை தொடர் வதா என்பது குறித்த ஆலோசிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக்கூட்டம், சங்க செயலாளர் எஸ்.அறிவழகன் தலை மையில் நேற்று நடந்தது. இதில் போராட்டத்தை தொடர முடி வானது.

இதுதொடர்பாக எஸ்.அறிவழகன் கூறும்போது, ‘‘வழக் கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 25 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை உடனடியாக ரத்து செய்து சிறையில் உள்ள 5 பேரையும் விடுவிக்க வேண்டும். தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. அந்த இடைநீக்க உத்தரவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுவரை புறக் கணிப்புப் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.

தலைமை நீதிபதி உத்தரவு தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கவில்லை. அதுகுறித்து இன்று (ஜூலை 28) தஞ்சாவூரில் நடைபெறும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வைகை, வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 126 பேரை இடை நீக்கம் செய்துள்ளனர். இது சட்ட விரோதமானது. போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வழக் கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். எங்கள் எல்லோரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும். இதற் காக முதல்கட்டமாக 761 வழக்கறிஞர்களின் பதிவுச்சான் றிதழ், பெயர் உள்ளிட்ட விவரங் களை தமிழ்நாடு பார் கவுன்சிலிடம் ஒப்படைத்துள்ளோம். தலைமை நீதிபதியின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x