Published : 10 Sep 2016 07:41 AM
Last Updated : 10 Sep 2016 07:41 AM

காவிரி மணலில் உடலை புதைத்துக்கொண்டு விவசாயிகள் நூதனப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சி காவிரி ஆற்றில் மணலில் உடலை புதைத் துக்கொண்டு விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தினர் திருச்சி ஸ்ரீரங்கம் காவிரிப் பாலம் அருகே ஆற்று மணலுக்குள் உடலை புதைத்துக்கொண்டு நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யா கண்ணு தலைமையில் 13 பேர் ஆற்றில் குழி தோண்டி, தலை மட்டும் வெளியில் தெரியும் வித மாக உடலை மண்ணுக்குள் புதைத் துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அருகில் 10-க்கும் மேற்பட்டோர் கூடி, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீ ஸார் அங்கு சென்று, அவர்களை மண்ணுக்குள் இருந்து மீட்க முயன்றனர். எனினும், விவசாயி கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, விவசாயிகளை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x