Published : 27 Oct 2014 09:45 AM
Last Updated : 27 Oct 2014 09:45 AM

2016 பேரவை தேர்தல் வெற்றிக்கு திட்டமிட வேண்டும்: கட்சியினருக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 24ம் தேதி முதல் கட்சியின் மாவட்ட நிர்வாகி களை சந்தித்து கட்சியை வலுப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்று சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போது மாவட்டங்களில் தேமுதிக வின் வளர்ச்சி குறித்து அவர்க ளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

தேமுதிகவுக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது, கட்சியை மேலும் வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விஜயகாந்த் இக் கூட்டத்தில் விவாதித்தார். மேலும் 2016-ல் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக் காக இப்போதே திட்டமிட்டு கட்சி பணியை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெற்ற தண்டனை, பால் விலை உயர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், எனவே அவர்கள் மனதில் இடம்பிடிக்க கடுமையாக உழைக்கவேண்டும் என்று விஜயகாந்த் இக்கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x