முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்?

முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்?
Updated on
2 min read

டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேற்றும் அமைச்சர்களின் முடிவு குறித்து சசிகலா குடும்பத்தினருக்குள் கருத்து யுத்தம் நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக முகநூலில் திவாகரன் மகன் பதிவுக்கு இளவரசி மகன் பதிலடி கொடுத்துள்ளார்.

கட்சி, ஆட்சியின் நலன் கருதி டிடிவி தினகரன் உள்ளிட்ட சசி கலா குடும்பத்தினரை அதிமுக வில் இருந்து நீக்க முடிவு செய்துள் ளதாக கடந்த 19-ம் தேதி அமைச்சர் கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்நிலையில், சசி கலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முக நூலில், “சசிகலாவைத் தவிர யாருக்கும் இடமில்லை. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் தற்போது முடிவு செய்துள்ளதை, சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் ஆலோசனையாகக் கூறினோம். இது தாமதமான முடிவு என்றாலும் சரியான முடிவு” என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த பதிவின் பின்னூட்டத்தில், “நடப்பவை கழகத் தின் நன்மைக்கானவை அல்ல. மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவற் கான வாய்ப்பை இவை உருவாக் கும்” என இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் பதிலடி கொடுத் துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயானந்த் வெளியிட்டுள்ள பதி வில், “அமைச்சர்கள் முடிவெடுப்ப தற்கு முன்பாக, நடந்ததெல்லாம் நல்லதாக இருந்திருந்தால் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு கழகம் தள்ளப்பட்டது? கழகம் நோய்வாய்ப் பட்டதில் இருந்து மீள ஒரு சில கசப்பான மருந்து தேவை” என குறிப்பிட்டிருந்தார். மேலும், முக நூலில் பலரது கருத்துகளுக்கு பதிலளித்துள்ள ஜெயானந்த், “சசிகலாதான் கட்சியின் பொதுச் செயலாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியின் பொதுச் செயலா ளர் தேர்தலை அவர் எதிர் கொள் வார். தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக இங்கு குரல் எழுப்பு வோர், இடைத்தேர்தலில் பொதுச் செயலாளர் சசிகலாவின் பெயர், படத்தைக் குறிப்பிடாமல் பிரச்சாரம் செய்தபோது அமைதியாக இருந் தது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதுகுறித்து சசிகலா குடும்பத் துக்கு நெருக்கமான சிலரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

கட்சி நிர்வாகம் தினகரன் கட்டுப் பாட்டில் வந்த பிறகு அவரிடம், திவாகரனின் மகன் ஜெயானந்த் துக்கு அதிமுகவில் மாநில அளவி லான பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை தினகரன் நிராகரித்து விட்டார். மேலும், “குடும்ப உறுப்பி னர்களிடம் இருந்து வரும் பரிந்துரை களையும் ஏற்க வேண்டாம்” என அமைச்சர்களுக்கு வலியுறுத்தி யதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல்களால் தினகரனுக் கும், திவாகரனுக்கும் இடையே விரிசல் அதிகமானது.

மீண்டும் ஒன்றுகூடலாம்

தந்தைக்கு எதிரான நிலைப்பாட் டில் இருந்த தினகரன் வீழ்த்தப்பட்ட தால், அதை வரவேற்று ஜெயா னந்த் இப்படியொரு கருத்தை பதிவு செய்திருக்கலாம். ஆனால், தங்களின் குடும்பம் இல்லாமல் அதிமுகவை யாராலும் ஒற்றுமை யாக வழிநடத்த முடியாது என்ற கருத்து சசிகலா குடும்பத்தினரிடம் இன்றளவும் நிலவுகிறது. அதன் வெளிப்பாடுதான் விவேக் ஜெயராமனின் பதிவு.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலுக்கு சசிகலா குடும்பத்தினருக்குள் ஒற்றுமை இல்லாததும் முக்கிய காரணம். சசிகலாவின் கணவர் நடராஜன் நல்ல நிலையில் இருந் தால், இந்நேரம் அனைவரையும் சமாதானம் செய்து வழிக்கு கொண்டு வந்திருப்பார்.

எனினும், எங்களுக்கு இன்னு மொரு நம்பிக்கை மீதமிருக்கிறது. திவாகரனின் மகன் ஜெயானந்த் துக்கும், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகளுக்கும் திருமணம் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திருமணம் நடைபெறும்போது, நிச்சயம் அனைவரும் மீண்டும் ஒன்றுகூட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in