Published : 26 Feb 2017 09:18 AM
Last Updated : 26 Feb 2017 09:18 AM
மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டிருக்கும் கர்நாடகா அரசு போன்ற தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்துவது குறித்து பிரதமரை சந்தித்து பேச தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளார். அவருடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் செல்கின்றனர்.
திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக நலன் குறித்த கோரிக்கை மனுவையும் அவர் பிரதமரிடம் கொடுக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT