Published : 12 Dec 2013 01:10 PM
Last Updated : 12 Dec 2013 01:10 PM

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 30 பேரையும் அவர்கள் பயணித்த 8 படகுகளையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

நேற்றிரவு, கோடியக்கரை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 30 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.

இத்தகவலை ஜெகதாப்பட்டினம் மீன்வளத் துறை துணை இயக்குநர் என்.திருநாகேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த 225 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x