Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM
தென் மாநிலங்களின் மின் தட்டுப் பாட்டைத் தீர்க்க, வட மாநிலங்களுடன் இணைந்த மின் தொடர் பாதை வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்த கோரிக்கை நிறைவேறியது. இதனால், வரும் கோடை காலத்தில், வட மாநிலங்களிலிருந்து எளிதாக மின்சாரம் வாங்க முடியும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மின் தொடர் கழகத்தின் மின் தொடர் பாதை, ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் அனைத்தும் மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் தென்மாநிலங்கள் துணை இணைப்பாக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால், தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுக்கு, மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து, தேவையான மின்சாரம் கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டது. காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட மின் உற்பத்தியையும் கட்டுப்படுத்தி முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மத்திய மின்தொகுப்புடன் தென் மாநிலங்களின் மின் பாதையை இணைக்க, தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசை வலி யுறுத்தி வந்தது. முதல்வர் ஜெய லலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசும் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, தென் மாநிலங்களின் இணைப்புக்கான மின் பாதை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது முடிந்துள்ளன. கடந்த 31ம் தேதி மாலை இந்த மின் பாதை இணைக்கப்பட்டது.ராய்ச்சூர் மற்றும் சோலாப்பூர் இடை யில் ரூ.815 கோடியில், 765கிலோ வோல்ட் திறனில் இந்த மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வரும் மே முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT