Published : 09 Jun 2016 08:07 AM
Last Updated : 09 Jun 2016 08:07 AM

தமிழக மீனவர்கள் விவகாரம்: முதல்வரின் கருத்துக்கு இலங்கை மறுப்பு

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்திச் செல்வதாக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச் சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைந்து கடந்த மே 30-ல் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். கடலுக்குச் சென்ற முதல் நாளே, எல்லை தாண்டிய தாகக் கூறி, 7 ராமேசுவரம் மீனவர் கள் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையிலும், ஜூன் 2-ம் தேதி புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை யாழ்ப் பாணம் சிறையிலும், ஜூன் 6-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 பேரை யாழ்ப் பாணம் சிறையிலும் இலங்கை கடற்படையினர் அடைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தமிழக மீனவர் கள் கடத்திச் செல்லப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள் ளது. இதுகுறித்து இலங்கை கடற் படை செய்தித் தொடர்பாளர் அக்ரம் அலவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இலங்கை எல்லைக்குள் வரும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்வதற்கான அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது. தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது. சர்வதேச கடல் எல்லை சட்டத்துக்கு உட்பட்டே தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x