Published : 08 Feb 2017 09:07 PM
Last Updated : 08 Feb 2017 09:07 PM
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை (வியாழன்) சென்னை வருகிறார். வியாழன் மதியம்வாக்கில் அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ஆளுநர் நாளை சென்னைக்கு புறப்படுகிறார், சென்னை வந்த பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கவிருக்கிறார், அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீது புகார் அளிக்க குடியரசுத் தலைவரைச் சந்திக்க டெல்லி புறப்படுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகை அறிவிப்பை அடுத்து விமான நிலையம் வரை சென்று பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
சசிகலா முதல்வராக பதவியேற்பதை ஆளுநர் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறார் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT