Published : 02 Jun 2016 08:25 AM
Last Updated : 02 Jun 2016 08:25 AM

காவல் துறை துணை ஆணையருக்கு பிடிவாரண்ட்

தேனி மாவட்டம், டி.கள்ளிப் பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து. கோயில் பூசாரியான இவர், 2012 டிசம்பர் 8-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத் திருந்தார்.

தற்கொலைக்குத் தூண்டிய தாக ஓ.ராஜா, மணிமாறன், தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி, சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் மீது பெரியகுளம் போலீஸார் வழக்கு பதிந்தனர். பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் களில் மூன்றாம் நபரான தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி மே 20-ம் தேதி இறந்துவிட்டார். இதை நீதிமன்றத்தில் தெரிவிக் கும்விதமாக இறப்பு சான்றித ழுடன் மனுவை ராஜா தரப்பு வழக்கறிஞர் எம்.கண்ணப்பன் தாக்கல் செய்தார். மீதமுள்ள 6 பேர் நேற்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க வேண்டிய சேலம் துணை ஆணையர் செல்வராஜ் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x