Published : 19 Mar 2017 11:06 AM
Last Updated : 19 Mar 2017 11:06 AM

விஜயகாந்த் ஏப். 1-ல் தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வரும் 1-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தேமுதிக சார்பில் போட்டியிடும் ப.மதிவாணன் கடந்த 3 நாட்களாக வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆர்.கே. நகரில் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விஜயகாந்த் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தனது தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார். இதையடுத்து பிரேமலதாவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x