Published : 22 Jun 2016 04:20 PM
Last Updated : 22 Jun 2016 04:20 PM

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தேமுதிக அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தருமபுரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

தேமுதிகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக புத்துயிர் பெரும்'' என்றார் அவர்.

2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார். தேர்லில் ஒட்டுமொத்தமாக தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம் தற்போது 2.4 சதவீதமாக குறைந்தது. இதனால், தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x