Published : 11 Sep 2016 10:33 AM
Last Updated : 11 Sep 2016 10:33 AM

ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானது அல்ல: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கருத்து

ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானது அல்ல என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வோளண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், விவசாய சங்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற் றனர். இந்நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சிறப்புரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறேன். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் என்பது அரசுக்கு எதிரானது அல்ல. இத்தடுப்பு நடவடிக்கைகள் அரசுக்கு அதிக வலு சேர்க்கும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே அதில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x