Published : 28 Feb 2017 09:07 AM
Last Updated : 28 Feb 2017 09:07 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண் ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய அரசு கட்டாயமாக்கி யுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாண வர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தி ருந்தது.

அதன்படி ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப் பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 1-ம் தேதி (நாளை) கடைசி நாள் என சிபிஎஸ்இ தெரிவித்தி ருந்தது. மார்ச் 1-ம் தேதி நாளை வர உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

ஒப்புதல் கிடைக்குமா?

இதற்கிடையில், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களுக்கு விலக்கு பெறுவதற் கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். மேலும் இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினார்.

ஆனால், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x