

மும்பை துறைமுகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட கன்டெய்னர் களில், பல கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு பண்டல்கள் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று காலையில் சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை துறைமுகம் முழுவதும் சோதனை நடத்தினர். எல்லா கன்டெய்னர்களிலும் சோதனை நடத்தினர்.
துறைமுகத்தை சுற்றியுள்ள குடோன்களில் இருந்த கன்டெய்னர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கன்டெய்னர்களிலும் ஸ்கேன் பரி சோதனையும் செய்யப்பட்டது. லாரிகளில் கொண்டுவரப்பட்ட கன்டெய்னர்கள் துறைமுகத் துக்குள் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. சோதனை செய்யப்பட்ட கன்டெய்னர்களை மட்டுமே வெளியே கொண்டுசெல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த ஒரு கன்டெய்னரில் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதை அறிந்த மத்திய உளவுப்பிரிவினர் கொடுத்த தகவலின்பேரிலேயே தீவிர சோதனை நடத்தப்படுவ தாகவும் கூறப்படுகிறது. நேற்று காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.