இலங்கை ரோந்துக் கப்பல் மோதி ராமேசுவரம் மீனவரின் படகு சேதம்

இலங்கை ரோந்துக் கப்பல் மோதி ராமேசுவரம் மீனவரின் படகு சேதம்
Updated on
1 min read

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத் தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக் கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்கள் கடல் பகுதியில் மீன் பிடிப்பதாகக் கூறி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை விரட்டியடித்தனர். ஜஸ்டின் என்பவருக்குச் சொந்த மான படகு மீது இலங்கை கடற் படை ரோந்துக் கப்பல் மோதியது. இதில் விசைப்படகு சேதம் அடைந் தது.

மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை கடற்படையினர் அறுத்து கடலில் மூழ்கடித்தனர். இதனால் மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in