Published : 13 Feb 2014 03:18 PM
Last Updated : 13 Feb 2014 03:18 PM

தமிழ் வளர்ச்சிக்கு அரசு ரூ.39.29 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில், தமிழ் வளர்ச்சிக்கு அரசு ரூ.39.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த அரசு 104.79 கோடி ரூபாயை தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. 2013-2014 ஆம்

ஆண்டில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், விருதுகள், பரிசுகள் ஆகியவற்றை அளித்திடவும் 46.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 31.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு, இப்பல்கலைக்கழகத்திற்கு 6.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

2014-2015 ஆம் ஆண்டுக்கு 39.29 கோடி ரூபாய் தமிழ் வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x