சிறையில் நளினி உண்ணாவிரதம்?

சிறையில் நளினி உண்ணாவிரதம்?
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவரது தந்தை சங்கரநாராயணனின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க சிறை நிர்வாகம் அனுமதி தர மறுத்ததால், கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘நளினி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 3 நாள் பரோலில் அனுப்ப அனு மதிக்க வேண்டும் என்று நளினியின் தாய் பத்மா கடந்த வியாழக்கிழமை மனு அளித்தார். அதன் மீது நட வடிக்கை எடுக்கவில்லை என் பதால் நளினி வருத்தத்தில் இருந்தார். உண்ணாவிரதம் ஏதும் இருக்க வில்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in